மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் தேர்வு போட்டி - மெட்ரிக்குலேசன் இயக்குநரின் செயல்முறைகள் & மதுரை உலகத் திருக்குறள் பேரவைத் தேர்வு செயலரின் கடிதம்! Thirukkural Competition for Matriculation School Students - Procedures from Director of Matriculation & Letter from Madurai World Thirukkural Council Exam Secretary! - Thulirkalvi

Latest

Tuesday 16 August 2022

மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் தேர்வு போட்டி - மெட்ரிக்குலேசன் இயக்குநரின் செயல்முறைகள் & மதுரை உலகத் திருக்குறள் பேரவைத் தேர்வு செயலரின் கடிதம்! Thirukkural Competition for Matriculation School Students - Procedures from Director of Matriculation & Letter from Madurai World Thirukkural Council Exam Secretary!

தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் - சென்னை-6 ஓ.மு.எண்.3048/அ1/2022 நாள்.08.08.2022 





பொருள் : பள்ளிக் கல்வி மெட்ரிகுலேசன் பள்ளிகள் மதுரை உலகத் திருக்குறள் பேரவை - 2022 கல்வியாண்டில் திருக்குறள் தேர்வு போட்டியில் மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதி அளித்தல்-சார்பு. 

பார்வை : 

மதுரை, உலகத் திருக்குறள் பேரவையின் தேர்வு செயலரின் கடிதம் நாள். 25.07.2022. 

பார்வையில் காணும் மதுரை, உலகத் திருக்குறள் பேரவையின் தேர்வு செயலர் பள்ளி மாணவ/மாணவிகளுக்கு திருக்குறள் போட்டித் தேர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்குமாறு கோரியுள்ளார். பார்வையில் குறிப்பிட்டுள்ள மதுரை. மாநில திருக்குறள் தேர்வு போட்டியில் விருப்பமுள்ள மாணவ / மாணவிகளை கலந்து கொள்ள அனுமதிக்க மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுந்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இப்போட்டி நடத்துகையில் மாணவ/மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், மாணவர்களை போட்டியில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்துதலை தவிர்க்கவும், தக்க அறிவுரை வழங்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது. 


No comments:

Post a Comment