நடப்பு கல்வியாண்டுக்கான (202526) நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை நேற்று வெளியிட்டது. அதில் மொத்தம் 210 வேலை நாட்களாக சொல்லப்பட்டு இருக்கிறது.
கல்வியாண்டின் இறுதி வேலை நாள் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் 24ந்தேதி ஆகும்.
தேர்வுகளை பொறுத்தவரையில், முதல் இடை பருவத்தேர்வு ஜூலை 16ந்தேதி தொடங்க உள்ளது. காலாண்டு தேர்வு செப்டம்பர் 18ந்தேதி தொடங்கி 26ந்தேதி வரையில் நடக்கிறது. காலாண்டு விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டு அக்டோபர் 6ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 முதல் 23ந்தேதி வரை நடைபெற உள்ளது. அரையாண்டு விடுமுறை 12 நாட்கள் விடப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 5ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
ஆண்டு இறுதித்தேர்வு ஏப்ரல் 10ந்தேதி தொடங்கி 24ந்தேதியுடன் முடிவடைந்து அதற்கு மறுநாளில் இருந்து கோடை விடுமுறை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர தீபாவளிக்கு 3 நாட்கள், பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள், கல்வியாண்டின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு எப்போது தொடங்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
பள்ளிகள் இந்த மாதிரி கல்வி அட்டவணையை பயன்படுத்தி பள்ளிகளுக்கு ஏற்றவாறு கால அட்டவணையை தயாரித்து கொள்ளலாம் என்றும், கால அட்டவணை குறித்த கருத்துகள் ஆலோசனைகளை msectndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.