ஓய்வூதிய நிலுவை இனங்களை முடித்தல் தொடர்பாக இன்று 14.06.2025 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

0 ThulirKalvi
பார்வையில் காணும் 10.06.2025 அன்று நடைபெற்ற சென்னை நிதித்துறை முதன்மை செயலாளர் அவர்களின் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் GPF/DCRG/CPS இனங்கள் ஏராளமான அளவில் உரிய காரணங்கள் ஏதுமில்லாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், AG உத்திரவு வரப்பெற்றும் தடையின்மைச்சான்று வழங்காமல் நிலுவை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மேற்படி நிலுவை இனங்களை 30.06.2025 க்குள் கட்டாயம் முடிவு செய்து அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இத்துடன் இரண்டு பட்டியல்கள் மற்றும் உரிய அறிவுரைகள் கீழ்கண்டவாறு தெரிவிக்களகிறது. பட்டியல் 1 ஏப்ரல் 2024 முதல் ஜீன் 2025 வரையுள்ள GPF/DCRG/CPS நிலுவை இனங்கள்(Excel Format) பட்டியல் 2- ஏப்ரல் 2024 முதல் மே 2025 வரை AG உத்திரவு வரப்பெற்றும் தடையின்மைச்சான்று வழங்காமல் நிலுவையாக வைக்கப்பட்டுள்ளவர்கள் விபரம் (Excel Format) மேற்படி GPF/DCRG/CPS ஓய்வூதிய நிலுவை இனங்களை முடிக்கும் பொருட்டு 14.06.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும், மாவட்ட கல்வி அலுவலங்களிலும் சிறப்புகுழு அமைத்து கீழ்கண்ட பணிகளை மேற்கொள்வதற்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.