BEO Pay Fixation Clarification by DEE

0 ThulirKalvi


பார்வை 2 இல் கண்டுள்ள அரசாணையில் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தினை நிர்வாக காரணங்களுக்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்தும் இப்பணியிடத்திற்கு தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2017 இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஊதிய அட்டவணையில் நிலை (Level) 17க்கு பதிலாக நிலை (Level) 18இல் ரூ.36,900-1,16,600/- ஊதிய விதிகத்தில் ஊதிய நிர்ணயம் செய்யலாம் எனவும் ஆணையிடப்பட்டது. மேலும், இவ்வரசாணையில் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியினை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் பதவி உயர்வு பணியிடமாக கருதுவது குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சிறப்பு விதிகளுக்கு திருத்தம் வெளியிடப்படும் நாள் முதல் இதனை நடைமுறைபடுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. பார்வை 3 இல் கண்டுள்ள அரசாணையில் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியினை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் பதவி உயர்வு பணியிடமாக கருதுவது சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சிறப்பு விதிகளுக்கு திருத்தம் வெளியிடப்பட்டது.

பார்வை இல் கண்டுள்ள இவ்வியக்கக கடிதத்தில் அரசாணை 4 வெளியிடப்பட்ட நாளான 07.02.2019 க்கு முன்னர் பணிமாறுதல் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அடிப்படை விதி 22 (B) இன் படி ஒரு ஊதிய உயர்வு அளித்து ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசிடம் தெளிவுரை கோரப்பட்டது.

பார்வை 6-ல் காணும் அரசுக் கடிதத்தில் கீழ்க்கண்டவாறு விவரங்கள் கோரப்பட்டுள்ளது.

மேற்காணும் அரசாணைகள் வெளியிடுவதற்கு முன்னர் வரை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் வட்டாரக்கல்வி அலுவலர்களாக தற்போது வரை பணிபுரிந்து வருவபவர்களுக்கு பார்வை3-ல் காணும் அரசாணையில் வட்டாரக்கல்வி அலுவலர் பதவியினை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்து ஆணையிடப்பட்டதன் அடிப்படையில் அவர்களுக்குஅடிப்படைவிதி 22 B-இன் படி தற்போது ஊதியநிலை 17-ல் பெறும் ஊதியத்தில் ஒரு ஊதிய உயர்வு அனுமதித்து அதன் பின்பு ஊதிய நிலை 18-ல் ஊதியம் நிர்ணயம் செய்யலாமா என்பதற்கு தெளிவுரை வழங்குமாறு இவ்வியக்கக 21.11.2023 நாளிட்டகடிதத்தில், கோரப்பட்டது.

இந்நேர்வு தொடர்பாக 29.02.2024 நாளிட்ட அரசுக்கடிதத்தில், வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடம் "பதவிஉயர்வு" பணியிடமாக 07.02.2019 முதல் கருதப்படுவதால், அப்பதவிஉயர்வு பணியிடத்திற்கான ஊதிய நிர்ணயம் அந்நாளிலிருந்தே அனுமதிக்கப்படும். எனவே 07.02.2019-க்கு முன்னர் பணிமாறுதல் மூலம் வட்டாரக்கல்வி அலுவலர்களாக சென்ற நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அடிப்படை விதி 22B-ன்படி ஊதிய நிர்ணயம் செய்திட வழிவகை இல்லை என அரசால் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி இயக்குநரின் 23.05.2024 நாளிட்ட கருத்துருவினை பரிசீலிக்க ஏதுவாக 23.08.2024 நாளிட்ட அரசுக்கடிதத்தில் கீழ்க்காணும் கூடுதல் விவரங்களுடன் உரிய பரிந்துரைகளுடன் உள்ளடக்கிய முழுமையான கருத்துருவினை அரசுக்கு அனுப்புமாறு கோரப்பட்டது.

1. தங்களது கருத்துருவில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து, உதவி தொடக்கக்கல்வி அலுவலராக ஏற்கனவே பணிமாறுதல் செய்யப்பட்டவர்கள் 07.02.2019 அன்று பதவிஉயர்வு ஊதியம் நிர்ணயம் செய்வதற்கு பதிலாக, அரசாணை (நிலை) எண்:19, பள்ளிக்கல்வி (தொடக்கக்கல்வி), நாள் 07.02.2019-கண்ட அரசாணை

வெளியிடுவதற்குமுன்னர். நடுநிலைப்பள்ளி தலைமை அதாவது 07.02.2019-5 ειραότσα ஆசிரியர்கள் பணியில் மாற்றுப்பணியில் வட்டாரக்கல்வி அலுவலர் பதவியில் சேர்ந்தநாள் முதல் பதவி உயர்வில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பாக தணிக்கை தடைகள் ஏற்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு 07.02.2019-க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் மாற்றுப்பணியில் வட்டாரக்கல்வி அலுவலர் பதவியில் சேர்ந்தநாள் முதல் பதவிஉயர்விற்குரிய ஒரு ஊதிய உயர்வு தவறுதலாக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம்.

2. அவர்களில் எத்தனை நபர்கள் தற்போது ஓய்வு பெற்றுள்ளனர். எத்தனை அலுவலர்களுக்கு தணிக்கைத்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த விவரம்.

3. 07.02.2019-க்கு முன்னர் வட்டாரக்கல்வி அலுவலர் பதவியில் சேர்ந்த நாள் முதல் பதவி உயர்விற்குரிய ஒரு ஊதிய உயர்வு தவறுதலாக அனுமதிக்கப்பட்டவர்களிடமிருந்து பிடித்தம் (Recovery) மேற்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரம்.

4. பார்வை 2-ல்காணும் அரசாணை வெளியிடப்பட்ட 07.02.2019 முன்னர் எந்தகாரணங்களின் அடிப்படையில் பணிமாறுதல் மூலம் சென்ற நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அடிப்படைவிதி 22B-ன்படி தவறுதலாக மாவட்டகல்வி அலுவலர்களால் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது. அவ்வாறு தவறுதலாக ஊதியம் நிர்ணயம் செய்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்த விவரம்.

5. தங்களது கருத்துருவில் கோரியவாறு 07.02.2019 அன்றைய தேதியில் வட்டராக்கல்வி அலுவலராகப் பணிபுரியும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் 07.02.2019 முதல் பதவி உயர்வுற்குரிய ஒரு ஊதிய உயர்வு அனுமதித்தால் அரசுக்கு கூடுதல் செலவினம் குறித்த விவரம் மற்றும் அவ்வாறு அனுமதிப்பதற்கு (Justifications). தேவையான விளக்கங்கள்.

எனவே இந்நேர்வு குறித்து அரசளவில் பரிசீலனை செய்திட எதுவாக இப்பொருள் குறித்து மேற்படி காணும் அரசுக்கடிதத்தில் கோரிவாறு கூடுதல் விவரம் மற்றும் உரிய பரிந்துரைகளுடன் முழுமையான கருத்துருவினை உடன் அரசுக்கு அனுப்புவதற்கு ஏதுவாக மேற்படி விவரங்களை Google Sheet -படிவத்தில் கோரப்பட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து 11.06.2025க்குள் உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download DEE Proceedings

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.