மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுடையோர் பட்டியல் தயாரித்து மாவட்ட வாரியாக ஒப்படைத்தல் சார்ந்து DSE செயல்முறைகள்!

மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுடையோர் பட்டியல் தயாரித்து மாவட்ட வாரியாக ஒப்படைத்தல் சார்ந்து DSE செயல்முறைகள்!

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு -முதுகலைப் பாட ஆசிரியர் / முதுகலை மொழி ஆசிரியர் /உடற்கல்வி இயக்குநர் நிலை-1 /உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிலிருந்து அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வளிக்க 01.01.2025 அன்றைய நிலவரப்படி தகுதியுடையோர் பட்டியல் தயாரித்தல் வாரியாக ஒப்படைக்க கோருதல் தொடர்பாக.

சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 014360 /டபிள்யு1/இ1/2024 நாள். 23.04.2025.

பார்வையில் கண்டுள்ள பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி, 01.01.2025 நிலவரப்படி, அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கானத் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்து 05.05.2025 க்குள் சமர்ப்பிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து Access File மூலம் மின்னஞ்சலில் பெறப்பட்டுள்ளது.

அதன்படி கோரப்பட்ட விவரங்களை உரிய இணைப்புகளுடன் கீழ்கண்டுள்ளவாறு, மாவட்டம் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ள நாளில் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலக பிரிவு எழுத்தர் வழியாக நேரில் மடிக்கணினியுடன் வருகைப்புரிந்து One Hard Copy Signed by CEO and CD Soft Copy W1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.